Friday, September 10, 2010

மதுரைக்கு பஸ்


கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் ...

'என் பெயர் குரு நான் மதுரைக்கு போறேன் நீங்க எங்கே போறீங்க ??'

'நானும் மதுரைக்கு தான் போறேன் ..எனக்கு 10 மணி பஸ் ...'

'அப்படியா ??? எனக்கு 11 மணிக்கு தான் பஸ் ..வாங்க இன்னும் டைம் இருக்கே ஒரு டீ சாப்பிட்டு விட்டு வரலாம்...'

' நான் கூட ஒரு டீ பைத்தியம் ...வாங்க ..'

' டீ என்ன தான் உடம்புக்கு புத்துணர்ச்சி கொடுத்தாலும் .... அது உடம்புக்கு நல்லதில்ல '

'ம்ம்ம் '

'காபி மற்றும் தேயிலையில் உள்ள “காபின்” ரசாயன பொருளில் உள்ள நச்சுத்தன்மையால் இதய நோய்களும், கேன்சர் போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாடி ஆராட்சி பண்ணி சொன்னாங்க ..ஆனா இப்போ அப்படியில்லை'

'அடடா???'

'தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 8 கப் டீ அல்லது காபி குடித்தால் அவர்களின் மூளை மற்றும் இதயம் வலுப்பெறும் என்று தெரியவந்து இருக்கு '


(டீ கடைக்காரரிடம் )

' தம்பி எனக்கு சக்கரை இல்லாம போடுப்பா...'

'என்ன சார் உங்களுக்கு சர்க்கரை வியாதியா.????...'

'ஆமாங்க எண்ணப் பண்ணுறது ? உங்களுக்கு ஒண்ணு தெரியுமா மேற்கு சீனாவில் உள்ள மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கிரான்கலாம். .'

'ஆச்சரியமா இருக்கே !!!!'

'சரி சீக்கிரம் குடிச்சிட்டு வாங்க ... மணி பத்தாக போகுது ...'

(பஸ் ஸ்டேன்ட்ல் )

'என்ன ..பஸ் ஏறுற கவலை கூட இல்லாம மேல பார்த்திட்டு இருக்கீங்க ...'

'பஸ் பத்து மணிக்கு மேல வரும்னு சொன்னாங்களே ..'

'?????'

1 comment:

  1. காபியை நல்லா கலக்குறேள் போங்கோ!!

    அருமையான செய்தி
    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete