Thursday, May 26, 2011

சிகரெட்டில் இருந்து விடுபட

குரு தன் மகனுடம் மருத்துவமனைக்கு செல்கிறார் ..
.
'உங்க பையனுக்கு தலையில எப்படி அடி பட்டுச்சு '

'அது வந்து டாக்டர் ......' 

' டாக்டர் கிட்ட எப்பவுமே உண்மையை மறைக்க கூடாது ...உண்மையை சொல்லுங்க ...'

'பையன் நேத்திக்கு குடிச்சிட்டு போஸ்ட் கம்பத்தில மோதிட்டான்...அது தான் தலையில காயம் '

'ஓ .... '

'நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் ... அவன் கேட்க மாட்டேங்குறான் டாக்டர். பாக்கெட் மணி கூட கட் பண்ணி பார்த்திட்டேன் ..எனக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க டாக்டர் '

'குரு சார் !!! எந்த ஒரு பழக்கத்தையும் ,அது நல்ல பழக்கமாகட்டும் அல்லது கெட்ட பழக்கமாகட்டும் , அதை திடீர்னு நிறுத்தக்கூடாது ...அப்படி நிறுத்தினா பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ...'

'அப்படின்னா ...இந்த பழக்கத்தை எப்படி நிறுத்திறது ?'

' கொஞ்சம் கொஞ்சமா நிறுத்த முயற்சிக்கணும் ..இல்லைனா ..... இன்னொரு நல்ல பழக்கத்தை பழக செய்து ஒரு கெட்ட பழக்கத்தில் இருந்து விடுபடலாம் ...'
'எப்படி டாக்டர் ?'

'ம்ம்ம்ம் உங்களுக்கு பின்னாடி கருப்பு சட்டை போட்டுட்டு உக்காந்திருக்காரே !!! அவரு கூட பயங்கர ஸ்மோக்கர் !!! அவரு இரண்டு நாள் முன்னாடி என்னை பார்க்க வந்திருந்தாரு ....சிகரெட்டில் இருந்து விடு படனும்னு ஆசை பட்டாரு ...'

'நல்லது நீங்க என்ன சொன்னீங்க ...'

'நான் அவருக்கு சிகரெட் பழக்கத்தை மாற்றுவதற்காக சுவிங்கம் பயன் படுத்த சொன்னேன் ....இதனால அவரால முழுசா சிகரெட்டில் இருந்து விடுபட முடியும்னு நம்பறேன்....இருங்க அவருக்கு என்ன முன்னேற்றம்னு அவர் வாயாலே கேளுங்க ....அவரை கூப்பிடுறேன் ....'

'மிஸ்டர்.மணி கொஞ்சம் உள்ளே வரீங்களா?'

கருப்பு சட்டைக்காரர் உள்ளே வருகிறார் ...

'மிஸ்டர்.மணி சிகரெட்டை மறக்க சுவிங்கம் யூஸ் பண்ண சொன்னேனே ...இப்போ சிகரெட்டை கொஞ்சம் மறக்க முடியுதா ?'

'அது ... வந்து ..'

'இவங்க இருக்கட்டும் பரவாயில்ல தைரியமா சொல்லுங்க .....'

'அது வந்து ரெண்டு நாளா ....முயற்சி பண்றேன் .....என்னால சுவிங்கத்தை பத்த வைக்கவே முடியல ....'

'??????!!!!!!!!'

விதைகள் இனி வீணாகாது..


ஒரு ஊரில் கொஞ்சம் மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்துகொண்டு இருந்தனர் ..அவர்களுக்கு ஒரு கவலை, அதாவது வயலில் இறங்கி நெல் விதை விதைக்கும் போது விதைப்பவரின் காலில் மிதிபட்டு விதைகள் பாழ் படுகிறது....இதை எப்படி தடுப்பது???
அனைவரும் கூடி யோசித்து இறுதியில் ஒரு முடிவெடுக்கிறார்கள் ....அப்பாடா இனி விதைகள் வீணாகாது ....அனைவருக்கும் ஒரே சந்தோசம் 
அவங்க எடுத்த முடிவு என்னன்னு கேட்கிறீங்களா ....
இனி முதல் விதைப்பவரை நாலு பேர் தூக்கி கொண்டு வயலில் இறங்குவர் ...(விதைப்பவர் கால் வயலில் படாது தானே )