Tuesday, September 14, 2010

மழை


குருவின் வீட்டை நோக்கி மழையில் நனைந்த படி ஓடி வருகிறார் வெங்கி .

'வாங்க வெங்கி ..ரொம்ப நனைஞ்சு போய் வந்திருக்கீங்க ..உள்ளே வாங்க ..'

'ஆமாங்க .இந்த பாழாய் போன மழை வந்து ..என்னோட முக்கிய வேலையை கெடுத்திடுச்சு ..'

'என்னங்க இது மழை பெஞ்சாலும் திட்டுறீங்க , பெய்யலைனாலும் திட்டுறீங்க...அப்போ என்ன தான் பண்ணனுமாம்...'

'மழை வந்து ராத்திரி வேளை மட்டும் பெஞ்சிட்டு ..பகல் நேரம் வெயில் வந்தா நல்லாயிருக்குமே ...அத விட்டுட்டு பகலில வந்து பெஞ்சா???'

'உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? மழை உருவாகிறது பகல் நேரத்தில்தான் .. முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரிய வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது'

' அடடா...!!!'

'மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு'

'ம்ம்ம்ம்'

'அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. '

'அப்படியா????'

'தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனரஅம .'

'இனிமேல் தண்ணி பஞ்சமே வராதின்னு சொல்லுங்க ...'

'அப்புறம் .... நீங்க மழையில நனைஞ்சிட்டு வரும்போது .... கையில ஏதோ ஒண்ணு நனையாம பாதுகாத்து கொண்டான்தீன்களே என்னாது அது ...'

'ஹி ஹி ஹி அது புதுசா வாங்கின குடைங்க.....'

2 comments:

  1. avaru potta bladuku malayey thevalamnu avaru odirupaarunu nenaikiren.

    ReplyDelete
  2. :)))

    கலக்குறீங்க சுரேஷ்

    ReplyDelete